பாப்பாரப்பட்டி சந்தையில் ஆந்திரா மிளகாய் குவிப்பு கிலோ ₹140க்கு விற்பனை

தர்மபுரி, செப்.21: தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டி சந்தையில் ஆந்திரா மிளகாய் குவிக்கப்பட்டு கிலோ ₹140க்கு விற்பனை செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் 1,280 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். ஆனாலும், ஆந்திரா மிளகாய் அதிக காரம் என்பதால் மக்கள் பெரிதும் விரும்பி வாங்குவதால், தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட சந்தைகளில் அதன் வரத்து அதிகரித்துள்ளது. பாப்பாரப்பட்டி வியாழன் சந்தையில், நேற்று 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆந்திரா மிளகாய் குவிக்கப்பட்டது. ஒரு கிலோ மிளகாய் ₹140க்கு விற்பனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மிளகாய் ₹90க்கு விற்பனையானது. ஆந்திரா மிளகாய் விலை, வரும் டிசம்பர் மாதத்தில் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: