அரசு பஸ் டயர் வெடித்து பயணிகள் காயம்

தர்மபுரி, செப்.19: தர்மபுரி அருகே அரசு பஸ் டயர் வெடித்ததில் பயணிகள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து பாலக்கோடு நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் புறப்பட்டது. 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவரான அன்பு என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். பாப்பாரப்பட்டியை கடந்து சென்றபோது கிட்டம்பட்டி என்ற இடத்தில் பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் பஸ்சின் உள்பகுதியில் இருந்த இருக்கை மற்றும் தளக்கூரை சேதமடைந்தது. பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: