பெரியார் 140வது பிறந்த நாள் விழா

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.19: பெரியாரின் 140வது பிறந்த நாளையொட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் திமுக கிளை சார்பில் அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக,  திராவிட கழகத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர் அதேபோல், பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு, பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தனியார் அமைப்பின் நிர்வாகி தமிழ்வேந்தன் மாவட்ட செயலாளர் ஆற்றல்அரசு, முனிரத்னம், வேடியப்பன், கார்த்திக், நடராஜன், இளவரசன், அருள் சசிகுமார், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உள்ள சிலைக்கு, அரசின் பெரியார் விருது பெற்ற வேங்கன் என்பவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மெணசியில், பெரியார் சிலைக்கு திராவிட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அரூர் நகர திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையத்தில் அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் முல்லைசெழியன், முகமதுஅலி, கிருஷ்ணகுமார், திருமால்செல்வன், சென்னகிருஷ்ணன், பேட்டை சேகர், மருதை, உதயசூரியன், வெங்கடேசன், கோட்டீஸ்வரன், ராஜசேகர், விண்ணரசன், திருவேங்கடம், ராதாஸ்டாலின், அஜீத், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: