துலாம்

9.5.2024 முதல் 15.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் சுக்கிரன், ராசிக்கு ஏழில் அமைந்து ராசியைப் பார்வை இடுவதால், ராசியின் வலிமை கூடுகிறது. இது ஒன்றே போதும் உங்களுடைய பிரச்னைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளும் வலிமையைப் பெறுவதற்கு. அதோடு புதனும் இணைந்து இருக்கிறார் என்பதால், எதையும் புத்தி பூர்வமாகச் சிந்திப்பீர்கள். காரணம், அவர் பாக்கியாதிபதி அல்லவா! இதுவரை ஏழாம் இடத்தில் இருந்த சூரியன், ஆறாம் இடத்தில் வார இறுதியில் வந்து சேர்ந்து குருவோடு இணைவதால், அதிக சக்தியைப் பெறுகிறார். அரசாங்க காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் முன்னேறும்.

கவனம் தேவை: பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத சில பிரச்னைகள் வரலாம். 12-ஆம் இடத்தில் விரய கேது இருப்பதால், செலவுகளில் கவனம் தேவை. சிறிய பிரச்னைகளை கவனிக்காவிட்டால் பெரிய பிரச்னையாக மாறும். குருவின் பார்வை பலம் சாதகமாக இருந்தாலும்கூட அவருடைய ஸ்தான பலம் உங்களுக்குத் தேவையற்ற பகை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால், பழக்க வழக்கங்களில் அதிக கவனமும் விழிப்புணர்வும் தேவை.

சந்திராஷ்டமம்: 8.5.2024 இரவு 7.06 முதல் 10.5.2024 பிற்பகல் 10.26 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: முருகனை வழிபட நன்மைகள் விளையும். வெள்ளிக்கிழமை தவறாமல்
மகாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.