டிராக்டர் மோதி ஆட்டோ டிரைவர் பலி

தேனி, ஆக. 27: போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ஒச்சு மகன் ராஜா(43). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் ராஜா தேனி அருகே சாலிமரத்துபட்டியில் இருந்து பத்ரகாளிபுரத்திற்கு செல்லும் சாலையில் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை அருகே உள்ள வண்டிப்பாதையில் இருந்து ஒரு டிராக்டர் பின்னோக்கி வந்தது. இதில் டிராக்டரின் டிரைலர் ராஜா ஓட்டிவந்த ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ கவிழந்து ராஜா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து இறந்த ராஜாவின் மனைவி லலிதா அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் டிராக்டர் டிரைவரான பத்ரகாளிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் சங்கரபாண்டியன் (28) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டிராக்டர் மோதி ஆட்டோ டிரைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: