ஆனால், விவசாய நிலங்களின் நடுவே உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்தால், மின்வாரிய நிர்வாகம் அவற்றை மாற்ற முன்வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மின் கம்பங்கள் சேதமடைந்து இருப்பதால், மின் வயர்கள் எப்போது அறுந்து விழுமோ என்ற அச்சத்துடன் தங்களின் நிலங்களுக்கு வேளாண் பணியை கவனிக்க செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, மானாம்பதி மின்வாரிய நிர்வாகம், கழனிப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கழனிப்பாக்கம் கிராமத்தில் எலும்பு கூடான மின் கம்பங்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.