திருப்போரூரில் மின்வாரிய ஊழியர்களின் காத்திருப்பு போராட்ட விளக்க கூட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் மின் வழங்கல் மற்றும் பராமரிப்பு நிலையத்தின் முன்பு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்ட விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தின் செயலாளர் தேவக்குமார், திருப்போரூர் கோட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் பதவிகளில் இருப்பவர்களுக்கு தேவையான பகுதிகளுக்கு பணியிடமாற்றம் செய்து தரவேண்டும். மேலும், மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பெறும் குடும்ப நல நிதி 5 லட்சம் ரூபாயை தமிழ்நாடு மின்வாரிய நிர்வாகத்திலும் அமல்படுத்தி, அதன் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

The post திருப்போரூரில் மின்வாரிய ஊழியர்களின் காத்திருப்பு போராட்ட விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: