ஏடிஎம் மையத்தில் கரும் புகை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ராஜவீதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் வெளியேறிய கரும்பு புகையால் பரபரப்பு நிலவியது. வாலாஜாபாத் ராஜவீதி பகுதியில் துணிக்கடை, வங்கிகள், மருந்தகம், மார்க்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த ராஜ வீதியில் செயல்பட்டு அரசு வங்கியின் முன் பகுதியில் ஏடிஎம் மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். இந்த, ஏடிஎம் மையத்தில் இருந்து நேற்று திடீரென கரும்புகை வெளியாகின. இதனையடுத்து, ஏடிஎம்மில் பணம் எடுக்க காத்திருந்தவர்கள் உடனடியாக வங்கி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். வங்கி ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். மேலும், தீ பரவாமல் இருக்க ஒரகடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏடிஎம் மையத்தில் தீ பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ராஜவீதி பகுதியில் ஏடிஎம் மையத்தில் கரும்புகை வெளியேறியதற்கு மின் கசிவு காரணம் என கண்டறிந்தனர். ஏடிஎம் மையத்தில் இருந்து வந்த கரும் புகையால் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

The post ஏடிஎம் மையத்தில் கரும் புகை appeared first on Dinakaran.

Related Stories: