பேரவையில் இன்று…

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை, மாலை என இருவேளை நடக்கிறது. காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு ஆகிய துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுவார். இறுதியாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுவார்.

மாலை 5 மணிக்கு மீண்டும் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில், எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுவார். நிறைவாக, துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுவார்.

The post பேரவையில் இன்று… appeared first on Dinakaran.

Related Stories: