மத்திய குழுவின் ஒப்புதலே நாங்கள் திறமையாக பணியாற்றியதை காட்டுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் பொதுவெளியில் வெளியிட உள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இரண்டரை ஆண்டுக்காலத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெகுவிரைவில் உங்களின் தகவலுக்காக வெளியிட உள்ளோம். இதோடு, அண்மையில் முடிவுற்ற தேர்தல்கள், இந்தியா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்
தீ ஹிந்து சார்பில் கோலப்பன் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post மத்திய குழுவின் ஒப்புதலே நாங்கள் திறமையாக பணியாற்றியதை காட்டுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: