தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

சென்னை: தீபாவளியன்று (அக். 31) சொந்த ஊர்களில் சென்றிறங்க ஏதுவாக ரயில்களில் முன்பதிவு தொடங்கியது. அக். 31ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் டிக்கெட் காலியானது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், முன்பதிவு மையங்கள் வழியாக பயணிகள் பயணத்திற்கு டிக்கெட் வாங்கினர். கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் 5 நிமிடத்தில் டிக்கெட் காலியானது. சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்ததால் சிறப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள் appeared first on Dinakaran.

Related Stories: