தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி காப்பாற்ற முயன்ற தாயும் சாவு

தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த உச்சனப்பள்ளி கிராமம் அருகே, பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த சாகர்(54) என்பவருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த முன்னாகுர்மி(35) , குடும்பத்துடன் தங்கி விவசாய வேலை செய்து வருகிறார். நேற்று மதியம், அவரது மகன் லோகேஷ்(6) எஸ்டேட்டில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில், தூண்டில் போட்டு மீன் பிடிக்க முயன்றபோது, 25 அடி ஆழம் கொண்ட தொட்டியில், தவறி விழுந்தான். அவனை காப்பாற்ற தாய் சுமா(28)வும் உள்ளே குதித்துள்ளார். இதில் இருவரும் பலியாகினர்.

 

The post தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி காப்பாற்ற முயன்ற தாயும் சாவு appeared first on Dinakaran.

Related Stories: