இந்நிலையில் நேற்று முன்தினம் ஒன்றரை வயது பெண் குழந்தை செங்கனி, சப்போட்டா பழம் சாப்பிட்டுள்ளார். அப்போது சப்போட்டா பழ விதையை விழுங்கிவிட்டார். அது குழந்தையின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது. இதனால், மூச்சு விட முடியாமல் குழந்தை செங்கனி மயக்கமடைந்தது. உடனே மல்லியகரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மல்லியகரை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சப்போட்டா விதை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை பலி appeared first on Dinakaran.