இதனால், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்ட பலரும் ஆளுநர் ரவிக்கு கண்டங்கள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுக்கப்படுவது குறித்து திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது; தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடுவது மட்டுமின்றி அது பற்றி கடினமான வார்த்தைகளால் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
The post சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புக்கு ஒப்புதல் தர மறுப்பது ஏன்?: சபாநாயகர் அப்பாவு கேள்வி appeared first on Dinakaran.