கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் ஜூலை 3-க்கு ஒத்திவைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் பா.ம.க., அதிமுக மனு அளித்தது. வழக்கின் விசாரணையை 10 நாட்கள் ஒத்திவைக்கக் கோரி தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முறையீடு செய்தார். முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கு வாங்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு கூறியுள்ளது.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: