இந்நிலையில் இவரது பெருமையை போற்றும் விதமாக தரங்கம் படியில் மறைந்த பாதிரியார் சீகன் பால்குவுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று சடவென்றவையில் செய்தித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டப்பேரவையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ் சுவிசேஷ லூத்தரன் சபையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கோரியுள்ளனர். தரங்கன்பாடியில் சீகன் பால்குவுக்குமணிமண்டபம் அமைக்கக்கோரி தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் அரங்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
The post தமிழுக்கு பெருமை சேர்த்த பாதிரியார் சீகன் பால்கு-க்கு சிலையுடன் அரங்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.