தெய்வமும் குழந்தையும் ஒன்று என்பதால் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் சொத்துகள், நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி வழக்கில், தெய்வமும் குழந்தையும் ஒன்று என்பதால் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் உள்ளது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோயில் சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த கரூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சொத்துகளை மீட்க கூட்டுக் குழு அமைத்து 8 ஆண்டுகள் ஆகியும் மீட்கப்படாதது வேதனை அளிக்கிறது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். திருத்தொண்டர் சபையின் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post தெய்வமும் குழந்தையும் ஒன்று என்பதால் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Related Stories: