நீலகிரி: நீலகிரி வனக்கோட்டம், நடுவட்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெல்வியூ தனியார் தேயிலை தோட்டத்தில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி உயிரிழந்துள்ளது. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் எரியூட்டப்பட்டது.