இந்நிலையில் மேல்நல்லாத்துர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு சீரான முறையில் மின்சார விநியோகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனிவரும் காலங்களில் சீரான முறையில் மின்சார வினியோகம் செய்யப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரை சேர்ந்த பொதுமக்கள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மின் வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணவாள நகர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறையாக மின்சார வினியோகம் செய்யப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post மேல்நல்லாத்துர், மணவாளநகர் பகுதிகளில் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.