இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. மேலும் சட்டீஸ்கர் மற்றும் மும்பை போலீசாரும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபரில் இருவருக்கும் எதிராக சிறப்பு பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையின் அடிப்படையில் இன்டர்போல் போலீசார் இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் அறிவிப்பு வெளியிட்டனர். இதன் அடிப்படையில் துபாயில் இருந்த ரவி உப்பாலை கடந்த வாரம் உள்ளூர் போலீசார் கைது செய்தனர். அவரை துபாயில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக துபாய் அதிகாரிகளுடன் அவர்கள் தொடர்பில் உள்ளனர். மகாதேவ் சூதாட்ட செயலியின் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகரை தேடும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் துபாயில் கைது: இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.