லியோ ட்ரைலர் வெளியீட்டுக்கு அனுமதி பெறவில்லை: ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்

சென்னை: லியோ ட்ரைலர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தாமாகவே பட தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது என ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. லியோ டிரைலர் வெளியீட்டுக்கு காவல்துறை தரப்பில் இருந்து எந்த அனுமதியும் வாங்கவில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின்போது போலி டிக்கெட்டுகள் மூலம் ரசிகர்கள் குவிந்ததால் குளறுபடி ஏற்பட்டது. ஏ.ஆர் .ரகுமான் இசை நிகழ்ச்சிபோல் அல்லாமல் லியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. எனவும் விளக்கம் அளித்தது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்கி ரசிகர்களை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

The post லியோ ட்ரைலர் வெளியீட்டுக்கு அனுமதி பெறவில்லை: ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: