தீவிர குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றிய வெற்றிச்செல்வன், விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய பாலமுருகன், காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணியாற்றிய நிவாசன் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், சிவகாஞ்சி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்திரமேரூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பேசில் பிரேம் ஆனந்த் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், வாலாஜாபாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெயவேல், தீவிர குற்ற தடுப்பு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்து டிஐஜி பொன்னி உத்தரவிட்டுள்ளார்.
The post காஞ்சிபுரம் காவல் சரகத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: டிஐஜி உத்தரவு appeared first on Dinakaran.