இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ஆர்.சாம்ராட், வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஏ பிளாக்கில் உள்ள மூன்றாவது தளம், மாடியை திறக்க அனுமதிக்க வேண்டுமென்று கோரினார். பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய அனுமதி பெறாமல் மூன்றாவது தளம் கட்டப்பட்டுள்ளதால் அதனை திறக்க அனுமதிக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தால் நோட்டீஸ் அனுப்பி தனியாக நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி மூன்றாவது தளம் மற்றும் மாடியை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
The post புலன் விசாரணைக்காக சீல் வைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி 3வது தளத்தை திறக்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.