கில்ட் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.மகேஸ்வரி ஆஜராகி, பொருளாளர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், செயலாளரை தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். கில்டிற்கு தொடர்பில்லாத மூன்றாம் தரப்பினர் இடையூறு ஏற்படுத்துவதாகவும், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் வரை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கில்டிற்கு வந்து அதன் பணிகளில் ஈடுபட செயலாளரை தடுக்கக் கூடாது என்றும், கில்டிற்கு தொடர்பில்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை செயல்படுத்திவதில் பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post கில்ட் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.