இக்காட்சி கூடத்தில் 200 பேர் அமரலாம். தற்போது தள உபகரணங்களை நிறுவும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவடையும். இத்திட்டம் திருவள்ளுவர் சிலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான மற்றும் அதிவேக அனுபவத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கலாசார பாரம்பரியத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை காண லேசர் தொழில்நுட்ப காட்சி கூட பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.