சிறப்பு புலனாய்வு விசாரணைதான் கோரினோம். டெண்டர் முறைகேடு புகாரில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்தேன். நீதிமன்றம் நிரபராதி என்று விடுவித்து விட்டதைப்போல பழனிசாமி பேசி வருகிறார்.பழனிசாமி மீதான டெண்டர் வழக்கில் பல சிக்கல் இருந்ததால் நீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதிமுக ஆட்சியில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்ட வழக்கில் இதுவரை சிபிஐ எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை.விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் தாமதமாகும் என்பதால்தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கறிஞரின் ஆலோசனையை பெற்று எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post உத்தம புத்திரர் போல பழனிசாமி நாடகம்.. டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல பேசி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பதிலடி appeared first on Dinakaran.