சென்னை: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணம் கவலையளிக்கிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்து தாய்மார்களும், பெண்களும், கதறி அழுது புரளும் காட்சி, அனைவரின் நெஞ்சை உருக்க செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.