நீதிமன்ற உத்தரவை மீறி தன் மீது பாடகி சுசித்ரா அவதூறு கருத்துகளை தெரிவிக்கிறார்: நடிகர் கார்த்திக் குமார் ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: நடிகர் கார்த்திக் குமார் – பாடகி சுசித்ரா தம்பதி கடந்த 2018ல் பிரிந்தனர். இந்நிலையில், சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி பேசியிருந்தார்.

பாடகி சுசித்ராவின் பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் கார்த்திக் குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை சுசித்ரா தெரிவிப்பதாக கார்த்திக் குமார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் செல்லாததால் வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நீதிமன்ற உத்தரவை மீறி தன் மீது பாடகி சுசித்ரா அவதூறு கருத்துகளை தெரிவிக்கிறார்: நடிகர் கார்த்திக் குமார் ஐகோர்ட்டில் முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: