பழைய குற்றால அருவியும் வனத்துறை வசம் செல்கிறது

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள 9 அருவிகளும் ஒரு காலத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில் பழத்தோட்ட அருவி, சிற்றருவி வனத்துறை வசம் சென்றது. இதையடுத்து மெயினருவி, ஐந்தருவி ஆகியவையும் வனத்துறை எல்கைக்குள் சென்றது. இந்நிலையில் பழைய குற்றால அருவியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து சுற்றுச்சூழலை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தற்காலிக சோதனை சாவடிக்கான அனுமதி கடிதத்தை வனத்துறை பெற்றுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினரும், சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

The post பழைய குற்றால அருவியும் வனத்துறை வசம் செல்கிறது appeared first on Dinakaran.

Related Stories: