பாஜ பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க நடிகை கவுதமி எதிர்ப்பு

மதுரை: நடிகை கவுதமிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி பாஜ பிரமுகர் அழகப்பன், ரூ.3 கோடி வரை வாங்கியுள்ளார். முதுகுளத்தூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ரூ.57 லட்சத்திற்கு 64 ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்தார். ஆனால், இந்த நிலத்தை விற்பனை செய்ய செபி தடை செய்துள்ளதை மறைத்து மோசடியாக விற்றுள்ளார். இதுதொடர்பாக நடிகை கவுதமி அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் குற்றபிரிவு போலீசார் அழகப்பன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்துள்ளனர். இதில் முன்ஜாமீன் கோரி அழகப்பன் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கவுதமி தரப்பில் அழகப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. பின்னர் விசாரணையை 4ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

The post பாஜ பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க நடிகை கவுதமி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: