இஎஸ்ஐ காப்பீட்டாளரின் வாரிசு என்ற சான்று பெற காலஅவகாசம் 31ம் தேதி வரை நீட்டிப்பு: மண்டல இயக்குநர் அறிவிப்பு

சென்னை: இஎஸ்ஐ சென்னை மண்டல இயக்குநர்(பொறுப்பு) வெளியிட்ட அறிக்கை: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சில அரசு மருத்துவக் கல்லூரிகளில், இஎஸ்ஐ காப்பீட்டாளருக்கான ஒதுக்கீட்டின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இஎஸ்ஐ காப்பீட்டாளர்களின் பிள்ளைகள், காப்பீட்டாளரின் வாரிசு என்ற சான்றிதழ் பெறுவதற்கு www.esic.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மண்டல இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post இஎஸ்ஐ காப்பீட்டாளரின் வாரிசு என்ற சான்று பெற காலஅவகாசம் 31ம் தேதி வரை நீட்டிப்பு: மண்டல இயக்குநர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: