இந்நிலையில், இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, கண்ணம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கிஷோர்(18), ஹரிஷ்(19), பாலசுப்பிரமணி(18) ஆகிய 3 பேரை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதன்மூலம் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இவ்வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், தனிப்படை போலீசாருக்கு ஆவடி மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் பாராட்டு தெரிவித்தார்.
The post இரட்டை கொலையில் மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.