சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; பேஸ்புக் காதலன் கைது

அண்ணாநகர்: சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பேஸ்புக் காதலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, போரூர் பகுதியில் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்த, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினோத் (20) என்பவருடன், பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர், சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய வினோத், கடந்த வாரம் சிறுமியை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கடத்தி சென்றார். அங்கு ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், வினோத்தின் நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அஜித் (21), ஜீவா (21) ஆகிய இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால், சிறுமி அங்கிருந்து தப்பித்து, தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வினோத்தின் நண்பர்கள் ஜீவா மற்றும் அஜித் ஆகிய இருவரை போக்சோ வழக்கில் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வினோத்தை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; பேஸ்புக் காதலன் கைது appeared first on Dinakaran.

Related Stories: