பேருந்திற்காக நின்று கொண்டிருந்த துணை நடிகைக்கு பாலியல் சீண்டல்: வடமாநில வாலிபர் கைது

சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் துணை நடிகையிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்ட வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார். குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க துணை நடிகை, நேற்று முன்தினம் பாரிமுனை பகுதியில் பொருட்கள் வாங்க வந்தார். பின்னர், குன்றத்தூர் செல்வதற்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு குடிபோதையில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் துணை நடிகையிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டார்.

இதுகுறித்து துணை நடிகை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடமாநில வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில் யோகேந்திரா (30) என்பதும், துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பேருந்திற்காக நின்று கொண்டிருந்த துணை நடிகைக்கு பாலியல் சீண்டல்: வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: