ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மேலாளர் கைது: உரிமையாளருக்கு வலை

பெரம்பூர்: செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலையில் செயல்படும் ஸ்பா மற்றும் சலூனில் பாலியல் தொழில் நடப்பதாக, செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று அந்த ஸ்பாவுக்கு சென்று திடீர் சோதனை நடத்தியபோது, 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்பா மேலாளர் ராயப்பேட்டையை சேர்ந்த ஷகீம் பேகம் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஸ்பா உரிமையாளர் அமன் காஜா என்பவர், சலூனுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் செய்வதாக கூறி, பெரம்பூர் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஷகீம் பேகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள அமன் காஜாவை தேடி வருகின்றனர்.

The post ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மேலாளர் கைது: உரிமையாளருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: