வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் ஏ-பிளாக் 4வது தெருவை சேர்ந்தவர் புஷ்பா (70). இவரது கணவர் செல்வராஜ் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தற்போது, புஷ்பா தனது தங்கையுடன் வசித்து வருகிறார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு, புஷ்பா வீட்டு வாசலில் படுத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், புஷ்பாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திடுக்கிட்டு, தூக்கத்தில் இருந்து விழித்த புஷ்பா, அவரை தள்ளிவிட்டு, கூச்சலிட்டபடி வீட்டினுள் ஓட முயன்றுள்ளார். அப்போது, தவறி விழுந்து கையில் அடிபட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் இதுகுறித்து தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், அதே பகுதி 5வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனுஷ் (20), மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது appeared first on Dinakaran.

Related Stories: