ரூ.20 ஆயிரம் லஞ்சம் துணை தாசில்தார், விஏஓ அதிரடி கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் புதிதாக திருமண மஹால் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று பெறுவதற்காக மண்டப மேலாளரான துரைராஜ் என்பவர் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு துணைத் தாசில்தார் பழனியப்பன் ரூ.20 ஆயிரத்தை லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து துரைராஜ், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனையின்படி நேற்று மாலை பெரம்பலூர் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்ற துரைராஜ், அங்கிருந்த துணைதாசில்தார் பழனியப்பன், விஏஓ நல்லுசாமியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். உடனே நெஞ்சு வலிக்கிறது என கூறிய தாசில்தாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post ரூ.20 ஆயிரம் லஞ்சம் துணை தாசில்தார், விஏஓ அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: