தொடர்ந்து, சிறைக் காவலர்கள் விசாரித்ததில், திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை சென்றபோது, நண்பர்கள் மூலமாக கிடைத்த கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகளை ஆசனவாயில் அடைத்து சிறைச்சாலைக்குள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சிறைக் கைதிகளிடமிருந்து 60 கிராம் கஞ்சா, 14 போதை மாத்திரைகள் ஆகியவற்றை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், புழல் சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் கிருபாகரன், சொட்டை செல்வா, அஜித்குமார், நரேந்திரகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post புழல் சிறையில் போதை மாத்திரை கஞ்சா பறிமுதல் : 4 கைதிகள் மீது வழக்கு appeared first on Dinakaran.