கோவை சிட்டி படங்களுக்கான புட்நோட்: காங். சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

 

கோவை, ஏப். 27: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளராக கோவையை சேர்ந்த கோட்டை செல்லப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் இம்ரன் பிரதாப் கார்கி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரது ஒப்புதலுடன், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம்பாஷா நியமித்துள்ளார். கோவையை சேர்ந்த ஒருவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. இவருக்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post கோவை சிட்டி படங்களுக்கான புட்நோட்: காங். சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.