நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

அன்னூர், ஜூன் 25: அன்னூரில் தபெதிக சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவ பட்டப்படிப்பு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை அமல்படுத்த வரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் அன்னூர் தாலுகா தபெதிக சார்பில் அன்னூர் பயனீர் மாளிகை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலுன், ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கல்வித் துறையின் உரிமைகளை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், தபெதிக மாவட்ட செயலாளர் சந்திரசேகர், அன்னூர் ஒன்றிய தலைவர் ராமன், பழனிச்சாமி, துரைசாமி, சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் நீட் வாசகம் அடங்கிய காகிதத்தை கிழித்து சேதப்படுத்தி கண்டனம் தெரிவித்தனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

The post நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.