மேட்டுப்பாளையத்தில் திறனறி தேர்வு பயிற்சி துவக்கம்

 

மேட்டுப்பாளையம்,ஜூன்24: மேட்டுப்பாளையம் மணி நகரில் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு தமிழக முதல்வரின் திறனறி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று துவக்கப்பட்டன.இப்பயிற்சி வகுப்பினை மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா துவக்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இப்பயிற்சியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் 20 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் ராஜாமணி,குப்புசாமி, சிவசங்கரன், மதிவாணன்,பிரின்ஸ் பிரதாபன்,மாலதி, ராஜாமணி உள்ளிட்டோர் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை நூலகர் பவித்ரா,நகராட்சி அலுவலர் ஜெயராமன்,மாரிமுத்து உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

The post மேட்டுப்பாளையத்தில் திறனறி தேர்வு பயிற்சி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.