வால்பாறையில் சாரல் மழை-மூடுபனி

 

வால்பாறை, ஜூன் 24: வால்பாறை பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், குளிர் மற்றும் மூடுபனி நிலவுகிறது. சோலையார் அணை, ஷேக்கல்முடி, பன்னிமேடு, கவர்கல், அக்காமலை உள்ளிட்ட பகுதிகளில் மூடுபனி நிலவுகிறது. நீடிக்கும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அவ்வப்போது, லேசான மழையும், திடீரென கன மழையும் பெய்கிறது.

இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணையில் 21மி.மீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 66, கீழ்நீராறு 32, வால்பாறையில் 33மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிஏபி திட்டத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் சோலையார் அணை நிரம்பி வருகிறது. 165 அடி உயரம் உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் தற்போது 65.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 618 கன அடி நீர் வரத்து உள்ளது. தற்போது அணையில் 1504 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

The post வால்பாறையில் சாரல் மழை-மூடுபனி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.