அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால் தெரியாமல் அழுத்தி விட்டேன். உடனே அலாரம் ஒலித்து விட்டது. முதல்முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார். உடனே பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக, இரவு 8 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றது. அந்த பயணியை, விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சரோஸ் (27), சென்னையில் வேலைக்கான இண்டர்வியூக்கு ரயிலில் வந்து, விமானத்தில் திரும்பி செல்ல இருந்ததும் தெரிந்தது.
The post சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.