இதையடுத்து விஜிலன்ஸ் துறையின் பரிந்துரையின் பேரில் அரியானாவில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தை அணுகிய சிபிஐ, ‘விசாரணைக்கு பெரும் மனிதவளம் தேவைப்படும் என்பதால், விசாரணையை மாநில காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரியது. ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்ததால், ஐந்தாண்டுகளுக்க பின் சிபிஐ வழக்குப் விசாரணையை தொடங்கிள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம் நிதி மோசடி செய்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இவ்விவகாரத்தகல் சிபிஐ மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
The post அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு appeared first on Dinakaran.