வேலூர், அக். 28: வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் வீடியோகால் மூலம் நளினியிடம் பேசினார். அப்போது பரோல் கேட்பது தொடர்பாக ஆலோசித்தனர் என்று போலீசார் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.