வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு சேகரித்த பாஜவினர் போலீசார் கடும் எச்சரிக்கை குடியாத்தம் நகரில்

குடியாத்தம், ஏப்.20: குடியாத்தம் நகரில் வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு சேகரித்த பாஜவினருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைத்திருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த பொதுமக்களிடம் பாஜகவினர் சிலர் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கூறினார்களாம். மேலும், வாக்குச்சாவடி மையம் அருகிலேயே பந்தல் அமைத்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே, திமுக மாவட்ட துணைச்செயலாளர், நகராட்சி கவுன்சிலர் அரசு மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு சென்று பாஜக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பாஜ நிர்வாகிகள் அமைத்திருந்த பந்தலை அகற்றும்படி கூறினர். மேலும், வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பாஜ பூத் ஏஜெண்டை எச்சரித்து சென்றனர்.

The post வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு சேகரித்த பாஜவினர் போலீசார் கடும் எச்சரிக்கை குடியாத்தம் நகரில் appeared first on Dinakaran.

Related Stories: