நாய்கள் கடித்து குதறியதில் மான் பலி பேரணாம்பட்டு அடுத்த கொத்தபல்லி கிராமத்தில்

பேரணாம்பட்டு, ஏப்.23: பேரணாம்பட்டு அடுத்த கொத்தபல்லி கிராமத்தில் நாய்கள் கடித்து குதறியதால் பெண் மான் உயிரிழந்தது. பேரணாம்பட்டு அடுத்த கொத்தபல்லி கிராமத்திற்கு நேற்று 4 வயது மதிக்கத்தக்க பெண் மான் தண்ணீர் தேடி பல்லலகுப்பம் விரிவு காப்பு காட்டில் இருந்து வந்துள்ளது. இதை கண்டதும் நாய்கள் மானை துரத்தி கடித்துக் குதறி கொண்டிருந்தது. சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் நாய்களை விரட்டியடித்து மானை மீட்டனர். பின்னர் இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்த வனத்துறையினர் காயங்களுடன் இருந்த மானை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் மான் உயிரிழந்தது. பின்னர், உடல் பங்களா மேட்டில் உள்ள வன அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

The post நாய்கள் கடித்து குதறியதில் மான் பலி பேரணாம்பட்டு அடுத்த கொத்தபல்லி கிராமத்தில் appeared first on Dinakaran.

Related Stories: