சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்

பேரணாம்பட்டு, ஏப்.26: பேரணாம்பட்டு அருகே மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் அளித்த புகாரின்பேரில் சர்ச் பாதிரியார் நேற்று கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சின்ன தோட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(54), சர்ச் பாதிரியார். இவருக்கு சொந்தமாக கீழ்பட்டி கிராமத்தில் 5 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சர்ச் கட்டும் பணிக்காக பாதிரியார் பாபு ஆட்களை வைத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது, அருகில் இருக்கும் பொது இடத்தையும் சேர்த்து சுத்தம் செய்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் பொதுமக்கள் தினமும் பால் ஊற்றி, பூ வைத்து வழிபாடு செய்து வந்த புற்றையும் சேர்த்து இடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி(54) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, பாதிரியார் பாபு தன்னுடைய மதத்தில் சேர்ந்து கொள்ளும்படி அவரிடம் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி நேற்று முன்தினம் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் குப்பன், மதமாற்றம் செய்ய முயன்றதாக பாதிரியார் பாபு மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.

The post சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார் appeared first on Dinakaran.

Related Stories: