குளத்தூர், மார்ச் 3: குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்துநாடார் நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இலக்கிய மன்றவிழா நடந்தது. கல்வி சங்க தலைவர் தாளமுத்து தலைமை வகித்தார். கிராம தலைவர் சின்னச்சாமி, துணை தலைவர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மரியஅனிதா வரவேற்றார். சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அறிவியல் மன்ற பொறுப்பாசிரியை காந்திக்கனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.