சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ஏரல், மே 1: சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில், 7வது தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜாபிந்த் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு துறை தலைவர் விஜயலட்சுமி, கணினி துறை தலைவர் ஜேஸ்பர்லின், எலக்ட்ரானிக் மற்றும் தொலைத் தொடர்பு துறை தலைவர் செல்வரதி, எலக்ட்ரிக்கல் துறை தலைவர் ஆனந்தி, கட்டிடக்கலைத்துறை தலைவர் ஜாக்சன், இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: